
அந்நியத் தொழிலாளர் விவகாரங்கள் கையாளப்படும் நடவடிக்கைகள் உள்துறை அமைச்சிடமிருந்து மனிதவள அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தினார். அந்நியத் தொழிலாளர் நிர்வகிக்கப்படுவது சுயேட்சை குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதற்கு முன் பரிந்துரை செய்திருந்தேன். அந்நியத் தொழிலாளர்கள் விவகாரங்களை மனிதவள அமைச்சு கையாளப்படும்போது அது இன்னும் சிறப்பான நடவடிக்கையாக அமைந்திடும் என்பதால் உள்துறை அமைச்சு உடனடியாக அவ்வமைச்சிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் குறிப்பிட்டார்.
