
சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை இலக்காக் கொண்டு இன்று தொடங்கி நடத்தப்படும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் பள்ளி செல்லாத இளையோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மந்திரி பசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இன்னும் தடுப்பூசி பெறாத உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார். தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள் மற்றும் கிடைத்த தேதியை தவறவிட்டவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்கலாம் என்று அவர் சொன்னார்.
