
நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு பேரா ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லோக் கா வோங் 200 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கினார். ஒரு குடும்பத்துக்கு 100 வெள்ளி வீதம் 200 குடும்பங்களுக்கு 20,000 வெள்ளி பட்டுச் சீட்டுக்களை அவர் வணங்கி உதவி புரிந்துள்ளார். 200 குடும்பங்களுக்கு தீபாவளி பற்று சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.
