
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. லெபொ அம்பாங் இந்தியர் பாரம்பரிய சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல், செயலாளர் இராஜன், பொருளாளர் லோகநாதன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், வேலாண்டி, நாராயணன் உட்பட அனைத்து முக்கிய பொறுப்பாளர்களும் இதில் கலந்துகொண்டு வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிந்தனர். மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் 400 குடும்பங்களுக்கு தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக டத்தோ அப்துல் ரசூல் தெரிவித்தார்.
