
கோவிட் தாக்கத்தினால் தங்களது பெற்றோரை இழந்து பரிதவிக்கும் அவர்களுக்கு உதவும் வகையில் மலேசிய குடும்ப அறக்கட்டளையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. நோய் தொற்றால் பெற்றோரை இழந்த சிறார்கள் இந்த அறக்கட்டளை மூலம் உதவிகளை பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 5,173 சிறார்கள் தங்களது பெற்றோரை நோய் தொற்றினால் பறி கொடுத்துள்ளனர்.
