
இந்நாட்டில் தொழிலாளர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை ஒழிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். காலம் காலமாகவே தொழிலாளர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள். சட்டங்கள் இருந்தாலும் அது தொழிலாளர்களுக்கு பாரபட்சமாகவே இருக்கிறது. நம் கண்முன்னே நடக்கும் இந்த அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஒரு சிறப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் விடுத்து புத்ராஜெயாவும் மனிதவள அமைச்சும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி இதை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
