
செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சினோவேக் தடுப்பூசிகளை இளையோருக்குச் செலுத்த சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. எந்தவொரு கடுமையான நோயினாலும் பீடிக்கப்படாத 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு இந்த வகை தடுப்பூசியைச் செலுத்தலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவோரை மருத்துவர் சோதிக்கும் அதே வேளையில் பெற்றோர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உரிய விளக்கத்தையும் அளிப்பார் என்று அவர் சொன்னார்.
