
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கபட்டிருக்கும் முடிவை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் கவனத்தில் கொண்டு தங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே வலியுறுத்தியுள்ளது. நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏழு நாட்களும் வாக்களிப்பதற்கு மூன்று நாட்களும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
