
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை விட பல்லின மக்கள் கொண்ட அரசாங்கம் மலாக்கா மாநிலத்திற்கு தேவைப்படுகிறது என்று முன்னாள் மலாக்கா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் சுட்டிக்காட்டினார். இனம் சமயம் பெயரில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் தேவையில்லை. ஆகவே மலாக்கா மாநிலத்திற்கு அனைத்து இனங்கள் சார்ந்த அரசாங்கம் தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கி வந்த ஆதரவை இவர் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மேற் கொண்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மலாக்கா மாநிலத்தில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. நவம்பர் 20 ஆம் வாக்களிப்பு இடம் பெறுகிறது.



