
உலகின் மிகக் குழப்பமான நாடாக மலேசியா ஆகி வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் இதற்கு முக்கியக் காரணம் சட்டம் ஆட்சியாளரின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மாறுகிறதே தவிர விதிமுறைகளுக்கு ஏற்ப அல்ல என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தெரிவித்தார். மாண்புமிகு சைபுடின் நசுதியோன் அவர்களே, மலேசியாவில் தற்போது மிகவும் குழப்பமான விவகாரங்கள் நிகழ்கின்றன. முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் நுழைய முடியாமல், அவசரகால சட்டம் விதிக்கப்பட்ட காலத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை 24,000 வரை பதிவுச் செய்யப்பட்டது, நாளுக்கு நூற்றுக்கணக்கானோர் மரணமுற்றனர், இப்போது உச்ச நேரத்தில் நாளுக்கு 300ஆகப் பதிவுச் செய்யப்படுவது மிகவும் குழப்பமாகத்தான் உள்ளது என்றார்.
