
நாட்டில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் மற்றும் மலேசியர்கள் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். பாலஸ்தீனர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் இயக்கங்கள் மலேசியாவில் இருப்பதை கவனத்தில் கொண்டிருக்கின்றோம்.
உலகம் முழுவதிலும் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் செயல் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மலேசியாவில் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.



