
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அமனா கட்சித் தலைவர் முகமட் சாபு புதல்வர் வட முகமட் சைபுலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் இவர் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த குற்றத்துக்காக இவருக்கு 8 மாத சிறைத் தண்டனையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து இவர் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது
