
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று ஜலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். ராயர் கோரிக்கையை முன் வைத்தார். இந்நாட்டில் இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் ம இகாவைச் சேர்ந்த டத்தோஸ்ரீ எம் சரவணன் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



