
மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சித் திட்டத்திற்கான ஒதுக்கிட்டுத் தொகையைக் குறைந்தபட்சம் .500 கோடி வெள்ளி யாக அதிகரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியது. வரும் 2022ஆம் ஆண்டுகான வரவுச் செலவுத் திட்டத்தில் வசதிக் குறைந்தவர்களுக்கான உதவித் தொகை .2,500) வெள்ளி, பி40 மக்களுக்கு 1,900 வெள்ளி மற்றும் எம்40 மக்களுக்கு 1,100) வெள்ளி யாக அதிகரிக்க வேண்டும். இதற்கு முன்பு வசதிக் குறைந்தவர்களுக்கு 1,300 வெள்ளி பி40 மக்களுக்கு 800 வெள்ளி மற்றும் எம்40 மக்களுக்கு 250 வெள்ளி என வழங்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டு காலமாக பாதிப்புற்ற மக்களின் வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் அளிக்க சமூகநல உதவித் திட்டங்களை இரட்டிப்பாக்க வேண்டியதும் அவசியமாகும்.



