
‘அதிபரையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி,” என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை வழங்கி, துணை அதிபர் வெங்கையா நாயுடு கவுரவித்தார். ” இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்,” என ரஜினி தெரிவித்திருந்தார்.



