
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாத்தேக் ஆடைகளை அணியலாம் என்று அக்டோபர் 11 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாத்தேக் ஆடைகளை அணிந்து வந்தனர். பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஷா, சுற்றுலா துறை அமைச்சர் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி, அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் உட்பட பலரும் பாத்தேக் ஆடைகளை அணிந்தனர்.



