
நவம்பர் 1ஆம் தேதிக்குள்ள தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும்படி அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமது கைருள் அடிப் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வேளையில் சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனினும், இந்த சிறிய எண்ணிக்கை அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு கடும் விளைவுகளையும் அரசாங்க ஊழியர்கள் மீது எதிர்மறையான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதோடு அவர்களின் சேவைத் திறனையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
