
அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் 480 கோடி வெள்ளி மலேசியக் குடும்பத்திற்கான வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 600,000 வேலை வாய்ப்புகளுக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாக நிதி அமைச்சர், டத்தோஸ்ரீ தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். இதில் 200 வெள்ளி கோடி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட 300,000 வேலை வாய்ப்புகளுக்கான இலக்குடன் சொக்சோவின் மூலம் தொழிலாளர்களை வேலை எடுக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ் மலேசியக் குடும்பத்தை வெலையில் இணைத்துக் கொள்ளும் முதலாளிமார்களுக்கு 20 விழுக்காட்டு ஊக்குவிப்புத் தொகையை முதல் 6 மாதத்திற்கு, 30 விழுக்காட்டு ஊக்குவிப்புத் தொகையை அடுத்த 6 மாதத்திற்கு அரசு வழங்கும் என்றார்.
