
2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படாது எனத் தாம் நம்புவதாக சமூக பொருளார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். வேலை இழப்பு மற்றும் வருமான பாதிப்பு போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருக்கும் மக்களுக்கு அரசாங்கமே தற்போது ஊன்றுகோலாக விளங்குகிறது. கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், வீடுகளை பழுதுபார்க்கும் மற்றும் நிர்மாணிக்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிலைநிறுத்துப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார்.



