
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் நடைபெறவிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்த தேர்தலில் ஹராப்பான் சின்னத்தை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பக்கத்தான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஜசெக 8 தொகுதிகளிலும் அமானா கட்சி 9 தொகுதிகளிலும் கெஅடிலான் கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அவர் சொன்னார்.



