
பல்கலைக்கழகங்களில் பயிலும் பி-40 பிரிவைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு தொலை தொடர்பு நிறுவனத்தின் ஒத்துழைப்போடு கையடக்க டெப்லட் வழங்கப்படும். இதற்காக 45 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக தொலைதொடர்பு நிறுவனம் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி வழங்கும் . இதன் மூலம ஆறு லட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் டெப்லட் கருவிக்கான உதவியை பெறுவார்கள் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் தெரிவித்தார்.



