
மலேசியர்கள் அனைவரும் நேற்றுத் தொடங்கி அரசு அறிவித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். மக்களவையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதி அமைச்சர், தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் அந்த வரவுச் செலவுத் திட்டத் தாக்கலில் முக்கியப் பங்கு வகித்தார். இதுகுறித்துத் தமது சமூக வலைத் தளத்தில் பெசிய அவர், 2022 வரவுச் செலவுத் திட்டம் எளிதான ஒன்றல்ல, அனைத்துக் கோரிக்கைகளையும் பூர்த்திச் செய்வது சாத்தியமாகாது. இருந்த போதிலும் நடப்பிலுள்ள நிதி வளத்தைக் கொண்டு இந்த வரவுச் செலவுத் திட்டத்தைத் தயார் செய்வதற்கு அமைச்சின் குழு இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டது என்றார்.
