
ஜசெக நாட்டின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தால் தங்களுக்கான லஞ்ச வாய்ப்பு பறிபோய் விடும் என அம்னோ அஞ்சுவதாக மூத்தப் பத்திரிக்கையாளர் டத்தோ காடிர் ஜாசின் கூறுகிறார். ஜசெகாவுக்கு வாக்களித்தால் அக்கட்சி ஆட்சிக்கு வந்து விடும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அஞ்சுவதுக் குறித்து அவர் இவ்வாறு சொன்னார். இப்படியொரு ஆட்சி அமைந்தால் அம்னோவின் லஞ்ச வாய்ப்பு இருண்டு விடும் என்றார். அம்னோ தலைவர் பயப்படுவதும் சரியானதுதான். ஜசெகாவை ஒதுக்குவதில் அம்னோவும்,தேசிய முன்னணியும் சரியான திட்டமிடலுடன் இருப்பதாலும்,ஜசெக மீண்டும் ஆட்சிக்கு வரமால் இருப்பதற்கு,அம்னோவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவதே சிறந்தது என இதற்கு முன் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தது குறித்து டத்தோ காடிர் கருத்துரைத்தார்.



