
மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட பின்தொடர் 4 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த எந்த கட்சியில் இணைவது என்பதற்காக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள். சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண், தெலுக் மாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் எப்பெண்டி மற்றும் பந்தாய் குண்டோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஸ்மான் ஆகியோர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.



