
வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை மலாக்காவிலுள்ள 6 அம்னோ தொகுதிகள் நிராகரிப்பதாக அதன் தொடர்புக் குழுத் துணைத் தலைவரும் தங்கா பத்து தொகுதியின் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் தெரிவித்தார். இந்த இறுதி முடிவு அம்மாநில அடிமட்ட உறுப்பினர்களின் இலக்கு மற்றும் உணர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். அதனால் பெர்சத்து கட்சியுடன் இனைந்து ஒத்துழைக்கப் போவதில்லை என்று மலாக்காவிலுள்ள 6 அம்னோ தொகுதிகளும் முடிவெடுத்து விட்டதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார் அவர்



