
தானத்தில் சிறந்த தானம் என்பதற்கு ஒப்ப,ஒரு உயிரை காப்பாற்ற நமது இரத்தத்தை தானமாக வழங்குவோம் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார். பல உயிர்களைக் காப்பாற்ற மருத்துவமனைகளில் இரத்த பற்றாக்குறை நிலவி வருவதை அறிந்து நாம் ஒவ்வொருவரும் அதனை தானமாக முன் வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநில வாரிசான் சமூகநல இயக்கமும், நிபோங் திபால் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உடல் உறுப்பு மற்றும் இரத்ததான நிகழ்வை தொடக்கி வைத்து அவர் இவ்வாறு உரையாற்றினார்.
