
இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு,பாரிட் புந்தார் தித்தி சேரோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் சுல்கர்னயின் பின் அப்துல் வசதிக் குறைந்த 70 இந்தியக் குடும்பங்களுக்கு பணமுடிப்பை அன்பளிப்பாக வழங்கினார். வசதிக் குறைந்தோரும் மற்றவர்களைப் போன்று இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார். கடந்த பொதுத்தேர்தலில் முதன் முறையாக இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றது முதல் இன்று வரையில் தொகுதி இந்தியர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருவதோடு மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



