
ஷா ஆலம் மற்றும் கோல சிலாங்கூரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வேலை வாயப்பு பயணத் திட்டத்தில் 239 பேருக்கு வேலை கிடைத்தது. மேலும் அந்த நேர்முகச் சந்திப்புகளில் கலந்து கொண்ட 1,108 பேரில் 513 பேர் இரண்டாம கட்ட நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார். வரும் 2022 ஆம் ஆண்டுவாக்கில் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை 4.4 விழுக்காட்டிலிருந்து 3.7 விழுக்காடாக குறைப்பதை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
