
தீபாவளித் திருநாளை முன்னிட்டு 300 குடும்பங்களுக்கு டி.கே.மலேசியா இயக்கம் நேற்று தீபாவளி அன்பளிப்புகளும் ரொக்கத்தையும் வழங்கியது. இந்த டி.கே. மலேசியா வழங்கிய அன்பளிப்புகளை 300 குடும்பங்களில் 120 பேர் செமினி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்று அதன் ஆலோசகர், டத்தோ மு.கலையரசு தெரிவித்தார் தற்போதைய கோவிட் தொற்று கால கட்டத்தில் மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

இந்த இயக்கம் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு இந்த கால கட்டத்தில் நிறைய செயல்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.



