
கோலாலம்பூரில் மளிகைக் கடை மற்றும் மருந்து கடைகளில் மதுபானம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பீர் பணத்தை விற்பனை செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் இந்த அதிரடி முடிவை வரவேற்பதாக மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார். இளையோர் மத்தியில் மது பழக்கத்தை ஒலிக்க நாங்கள் போராடி வருகிறோம். கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் இந்த முடிவு எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர் சொன்னார்.



