
நவம்பர் 20 ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் கெடா பாயா பெசார் வட்டாரத்தைச் சேர்ந்த 3 ஏழை இந்திய குடும்பங்களின் 12 பிள்ளைகளுக்கு தீபாவளி கொண்டாட்டம் மிக மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. வறுமை கோட்டின் கீழ் வாழும் இந்த மூன்று இந்திய குடும்பங்களைச் சேர்ந்த 12 பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்குவதற்குரிய செலவுகளை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாங்கு அல்மா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுபிட்சம் டெக்ஸ்டைல்ஸ் பிரேம் உதவியோடு இவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தாடைகளை வாங்கி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் புத்தாடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட உதவி புரிந்த மாண்புமிகு கருப்பையா மற்றும் பிரேம் ஆகியோருக்கு தாய்மார்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.



