
பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் தொடக்கி வைத்த மலேசியக் குடும்ப அறவாரியம் 1 எம்.டி.பி. மோசடியைப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்று புக்கிட் மெர்தாஜம் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் அச்சம் தெரிவித்தார். தனது உதவி வழங்கும் நடைமுறையை அரசு உண்மையில் மாற்றியமைத்து சமூகநல இலாகாவை மட்டுமே இதற்குப் பொறுப்பாக நியமிக்க வேண்டும். இருந்த போதிலும் இந்த அறவாரியம் அரசின் நிதியை அரசியல் மற்றும் சுய நலனுக்காக மாற்றும் தடமாக மாறக்கூடும் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றார்.
