
நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நடப்பு அரசாங்கம் எந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் நஜீப் கேள்வி எழுப்பினார்.
மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்காக இருக்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்தது. மேலும், நாட்டில் நான்கு மாதங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் எப்படி நோய்தொற்று அதிகரித்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நோய் தொற்றால் மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றார் அவர்.
