
ஜொகூர்யோங் பெங்,தாமான் மேவா தொகுதியில் தீபாவளியை முன்னிட்டு தாமான் மேவா ஜசெக கிளை தலைவர் சண்முகவேலு ஏற்பாட்டில்,ஜசெக நூசா பிஸ்தாரி கிளை தலைவர் சந்திர சேகரன் தலைமையில் இவ்வட்டார இந்திய மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு கொடுக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு வருமையின் கீழ் உள்ள இந்தியர்களும் மகிழ்ச்சியாக இந்த தீப திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அன்பளிப்பு வழங்கப்பட்டதாக முன்னாள் சொகூர் சொக்சோ வாரிய உறுப்பினரும்மான சந்திரசேகரன் குறிப்பிட்டார். தொகுதி தலைவர்களிடம்மும் வலுவான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை யென்றால் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்ப்படும் வாய்ப்பு இருப்பதாக அறிப்படுகிறது.இது தொடர்பாக ஜஸசெக துணை தலைவர் நல்லதொரு முடிவினை எடுத்து மேல் மட்ட தலைவர்களிடம் சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்று மாநில தொகுதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று நடந்த தீபாவளி அன்பளிப்பின் போது ஓர் மான்புமிகு .குலசேகரனிடம் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.மான்புமிகு குலசேகரன் அவர்களும் இது தொடர்பாக மேல் மட்ட தலைவர்களிடம் தெரிய படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சொகூர் மாநிலத்தை பொறுத்தவரை,மாநில தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து எந்த ஒரு பதவியும் இல்லாமல் இவ்வட்டார மக்களுக்கு பல விதமான சேவைகளை நேரம் காலம் பாரமல் செய்து வரும் சந்திரசேகரனுக்கு நாடாளுமன்றம்மோ அல்லது சட்டமன்றம்மோ வழங்கப்பட்டால் இன்னும் பல சிறப்பான சேவைகளை செய்வார் என்று இங்குள்ள மக்களும்,தொகுதி தலைவர்களும் மற்றும் உறுப்பினர்களும் தமிழர் வரலாறு டிவி நிருபரிடம் நேர்கானல் வழியாக தெரிவித்தனர். ஜசெக நல்லதொரு முடிவை எடுக்கும் என்று சொகூர் மாநில ஜசெக உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாகும்.



