
முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளிர், மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா ஹருண் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பினாங்கு மாநிலத்தில் மூன்று முதியோர் இல்லங்கள் நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளன. முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசாங்கம் உடனடியாக தடுப்பூசியை போட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
குடும்ப மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரிஸ்னா ஹருன் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கஸ்தூரி பட்டு கேட்டுக்கொண்டார்.
