
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தியர்கள் உட்பட அனைத்து மக்களும் அவர்களின் வளர்ச்சியை உறுதிசெய்ய உதவும் வகையில் பல்வேறு கொள்கைகளை சிலாங்கூர் அறிமுகப்படுத்தி வருகிறது. சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு முன்முயற்சியான சித்தம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு I-Seed ஆகியவை இந்தியர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்கள். அதை தவிர்த்து தமிழ் தேசிய வகைப் பள்ளிகளுக்கு (SJKT), வழிபாட்டு இல்லங்களுக்கான உதவும் திட்டங்களும் உண்டு. 2018 இல் டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரி டத்தோ’ மந்திரி புசார் ஆனதிலிருந்து இந்திய மக்களின் மேம்பாட்டுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
