
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மூடா கட்சிக்கு தொகுதி வழங்கப்படாததால் பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைப்பு இல்லை என்று மூடா கட்சித் தலைவர் சைட் சாடிக் தெரிவித்தார். தொகுதி ஒதுக்கீடு குறித்து பக்கத்தான் ஹரப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். தொகுதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார். மலாக்கா மாநில ஆட்சி கவிழ்க்கப்பட்ட இருவருக்கு போட்டியிட தொகுதி வழங்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
