
சரவாக்கில் ஜிபிஎஸ் என்னும் அரசியல் கூட்டணிக்கு எதிராக வலுவான போட்டியை அளிக்கும் வகையில் பார்ட்டி சரவாக் பெர்சத்துவும்(பிஎஸ்பி) ஜசெகவும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என்று பிஎஸ்பி அரசியல் கரம் நீட்டியுள்ளது. பிஎஸ்பி கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் செலங்காவ் எம்பியுமான பாரு பியான் இதன் தொடர்பில் ஜசெக சரவாக் மாநிலத் தலைவர் ச்சோங் ச்சியெங் ஜென்னை நேரில் சந்தித்து இந்த அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். ஒத்த சிந்தனை உடைய எதிர்க்கட்சிகள் ஒரே இலக்குடன் களம் காண்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக பாரு பியான் தெரிவித்துள்ளார்.
