
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மலேசிய பிரஜை நாகேந்திரனுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோரிக்கை விடுத்துள்ளார். நாகேந்திரனை தூக்கில் போட வேண்டாம் என்று சிங்கப்பூர் பிரதமரையும் அந்நாட்டு அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறேன். சிங்கப்பூர் சட்ட விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை ஆனால் இவருக்கு கருணை கட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர். வரும் நவம்பர் 10 ஆம் தேதி நாகேந்திரனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
