
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் சமூக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மீட்டுக் கொள்ள அரசாங்கம் தயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு நோய்த்தொற்று கட்டத்திற்கு மாறிய போது அரசாங்கம் ஒரே நிலையான வழிகாட்டு நெறிமுறையை (எஸ்.ஒ.பி.) பயன்படுத்தியது. அதுவே அது பொது சுகாதார நெறிமுறையாகும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ மஸ்துரா யாசிட் கூறினார். எனினும், கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்டால் தடுப்பு மற்றும் கண்காணிப்பு முறை கூடுதல் விழிப்பு நிலைக்கு கொண்டுச் செல்லப்படும் என்று அவர் சொன்னார்.



