
பொதுச்சேவை ஊழியர்களுக்கு மிகவும் அதிகப்படியான ஓய்வூதியத் தொகைக் கிடைக்கா விட்டாலும் அவர்கள் மற்ற துறைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கும் வகையில் 40 வயதில் பணி ஓய்வுப் பெற அனுமதிக்க வேண்டியது அவசியமாகும் என்று சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார். இவர்களில் பெரும்பாலானோர் முன்கூட்டியே பணி ஓய்வுப் பெற விரும்புவதால் நிபுணத்துவத் துறையில் ஈடுபட, வர்த்தகத்தைத் தொடங்க அல்லது அரசியலில் களமிறங்குவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது இவர்கள் மிகவும் நீண்ட காலத்திற்குப் பொதுச்சேவைத் துறையில் இல்லாமல் இருப்பதற்கு வகை செய்யும் என்றார்.
