
மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் இதுவரை நெத்திலி மீன்கள் மட்டுமே பிடிபட்டுள்ளன. அரசியல் கட்சியை சேர்ந்த சுறா மீன்களை ஏன் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்யவில்லை என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் ராயர் நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார். நாட்டில் மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குனர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஏன் கைது செய்யப்பட்டு விசாரிக்கவில்லை என்று அவர் கேள்வியை எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



