
30,000 மர கன்றுகளை நட்டு பராமரித்து வரும் துளசி கௌடா என்பவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள் ஐக்ளார்.. கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வர்களுக்கு இந்திய அரசு உயரிய விருதுகளை வழங்கி வருகிறது. நேற்றைய தினம் வழங்கப்பட விருது விழாவில், அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தவர்தான் துளசி கௌடா.. காரணம், வெறுங்காலுடன் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்று கொண்டார்.. இவர் ஒரு பழங்குடி பெண்.. 72 வயதாகிறது.. இவரை ‘காட்டின் கலைக்களஞ்சியம்’ என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.. கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தை சேர்ந்தவர்.. இயற்கை ஆர்வலர்.. விருது பெறுவதற்கு முன்னர் துளசி இந்திய பிரதமர் மோடிக்கு பணிவான வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் வெறுங்காலுடன் சென்று விருதைப் பெற்று கொண்டார்.



