
நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரத்து 737 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 28 லட்சத்து 38 ஆயிரத்து 338 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 24 லட்சத்து 42 ஆயிரத்து 373 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 27 லட்சத்து 25 ஆயிரத்து 876 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.



