
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளில் தேர்தல் பிரசாரம் உட்பட மலாக்கா மாநிலத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப் பரிசீலிப்பதற்கு அரசு தயார் நிலையில் இருப்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரிதும் வரவேற்றார். இதில் பக்காத்தான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் முதல்வர் வேட்பாளர்களிடையே பொது விவாதத்தை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இப்பரிந்துரை உண்மையில் ஒரு நலமான மற்றும் முதிர்ச்சியான ஜனநாயக நாடாக மலேசியாவை உயர்த்தும் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.



