
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளை வென்று மாநில அரசை அமைக்க தே.மு. இலக்குக் கொண்டிருப்பதாக மாநில அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ தெரிவித்தார். கடந்த 14 பொதுத்தேர்தலில் வென்ற 13 தொகுதிகளும் அடங்கும். கடந்த 13ஆவதுப் பொதுத்தேர்தலில் 21 சட்டமன்றத் தொகுதிகளை நாங்கள் கைப்பற்றினோம். இதில் நடப்பு நிலவரங்கள், உள்நாட்டு நிலவரங்கள் மத்திய அரசு ரீதியிலான விவகாரங்கள் ஆகியவை எதிர்கட்சியினருக்குச் சாதகமாகி விட்டன. அந்த சுனாமி சூழ்நிலையிலும் கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் 13 தொகுதிகளைக் கைப்பற்றி விட்டோம் என்றார் அவர்.



