
பெர்சத்துக் கட்சியைத் தொடங்கியது துன் மகாதீர் அல்ல; அம்னோவில் இருந்து நஜீப்பால் நான் நீக்கப்பட்டபோது அதற்கான அடித்தளம் தோன்றியது. அம்னோவின் துணைத் தலைவர் என்னும் வகையில் ‘1எம்டிபி’-க்கு ஆதரவாக பேசும்படி நான் வற்புறுத்தப்பட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் எழுந்த அரசியல் வேறுபாட்டால் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட எனக்கு ஓர் அரசியல் தளம் தேவைப்பட்டது. இதற்கான முனைப்பில் நான் ஈடுபட்டிருந்த வேளையில், துன் டாக்டர் மகாதீரும் என்னுடம் இணைந்தார். பெர்சத்து கட்சிக்கு நான் தலைவராக பொறுப்பு வகித்த வேளையில் துன் மகாதீர் கௌரவத் தலைவராக நீடித்தார் என்று முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.



