
ஈக்கள் தொல்லையால் எங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக இங்கு பாகான் செராய் கிரியான் மாவட்டத்திலுள் செமாங்கோல் பகுதியில் கம்போங் ஜெயா,கம்போங் பாலிக் புக்கிட் மற்றும் தாமான் இண்டா ஆகிய இடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கோழி வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் துர்நாற்றம் எங்களை வாட்டி வதைப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொண்டனர். சுமார் முப்பது ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
