
வாக்காளர்களைச் சந்திப்பதில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் பெரும் சவாலானவையாக இருப்பதை சுங்கை ஊடாங் சட்டமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளர், டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் ஒப்புக் கொண்டார். மலாக்கா தேர்தல் கால கட்டம் முழுவதும் நேருக்கு நேர் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்களிடையே என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வழங்குவதில் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. நாம் நேருக்கு நேராகச் சந்திக்க முடியாது, மாறாக உணவு உண்ணும் போது அல்லது சந்தையில் காய்கறி வாங்கும் போதுதான் நாம் சந்தித்து கொள்ள முடியும். அதற்கும் இன்னும் சில நாட்கள்தான் உள்ளன என்றார் அவர்.



