
சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 15 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கடுமையான போட்டி மேல வைக்கிறது. பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ், வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், வழக்கறிஞர் விமல் வேம்பரசன், வழக்கறிஞர் ராமு , கவுன்சிலர் ராய்டு, யுவராஜ், சிப்பாங் சிவகுமார், சிலாங்கூர் மாநில கிராம தலைவர் இராஜேந்திரன் ராசப்பன் உட்பட 12 இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை தவிர்த்து சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களான ரோனி லியூ, இங் சூய் லின் ஆகியோரும் போட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போகும் இந்திய தலைவர்கள் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.



